இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

15 நவம்பர், 2009

சடுகுடு விளையாட்டு



தமிழர்களின் வீர விளையாட்டு. சங்க கால போர் முறைகளின் எச்சமாகக் கருதப்படுகிறது. வெட்சித் திணையின் துறைகளாகக் கூறப்படும் 'பசுக்கூட்டங்களைக் கவர்தலுக்கு எழுகின்ற பேரொலி, பகைவேந்தரின் புறத்திடத்து சென்று சூழ்ந்து தங்குதல், தங்கிய பின்னர் சூழப்பட்ட ஊரை அழித்தல், எதிர்ப்பவர்களைப் போரிட்டு மீளுதல்' ஆகிய கூறுகளோடு பின் வரும் சடுகுடு ஆட்ட அலகுகள் ஒப்பு நோக்கத் தக்கவை. அவை முறையே,' ஆட்டத்தில் பாடப்படும் பாடலின் பேரொலி, எதிரணியின் எல்லைக்குள் சென்று ஆடுதல், அங்குள்ளவர்களைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்தல், பிடிக்க வருபவர்களிடமிருந்து மீளுதல்'. ஆகியனவாகும்.
பாடல்: 1. நாந்தாண்டா ஒப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளி பெரம்பெடுத்து
வெளையாட வரேண்டா
தங்கப் பெரம்பெடுத்து
தாலி கட்ட வரேண்டா
வரேண்டா... வரேண்டா...
2. சப்ளாஞ்சி அடிக்கவே
சறுக்கிட்டு உழவே
ஒப்பனுக்கும் ஓயிக்கும்
ஒரு பணம் தெண்டம்
தெண்டம்... தெண்டம்...
3. தோத்த கடைக்கு நான் வரேன்
தொட்டு பார்க்க நான் வரேன்
கருவாட்டு முள்ளெடுத்து
காது குத்த நான் வரேன்.
பயன்கள்: வீர உணர்வு வளரும், சவால்களை எதிர் கொள்ளக் கற்பிக்கிக்கிறது, தமிழரின் போர் மரபுகளை அறிய உதவுகிறது.

2 கருத்துகள்: