இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

14 பிப்ரவரி, 2019

ஆந்திராவில் திருமணம்



மகளின் தோழிக்கு குண்டூரில் திருமணம். துணைக்கு செல்லவேண்டிய நிலை. திருமணம் இரவில்தான் . காலை நலங்கு. இது கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. பனை ஓலையால் ஆன பந்தலில் மணப்பெண்ணுக்கு நலங்கு வைத்தனர். வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் ஒருவர் காலில் மஞ்சள் பூசிவிட்டார், இன்னொரு பெண் கழுத்தில் சந்தனம் தடவினார், மற்றொரு பெண் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டார். நலங்கு செய்தவர்களில் ஒருசிலர் மணமகளுக்கு ரவிக்கைத் துணியும் கொய்யாப் பழமும் அன்பளிப்பாக வழங்கினர். மணமகளுக்கு பக்கத்தில் ஒரு குழந்தையை அமர்த்தி அக்குழந்தைக்கும் அனைத்து சடங்குகளையும் செய்தனர். ஒவ்வொருவரும் மஞ்சள் பூசிய அரிசியை மணமகளின் தலையில் இட்டு வாழ்த்தினர். நிறைவாகப் பெண்கள் நலங்குப் பாடல்கள் பாடி பெண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.