இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

18 ஜனவரி, 2012

புதிய கூரைப் பேட்டை




நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பல சிற்றூர்களை விழுங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று கூரைப்பேட்டை. அந்த ஊரை காமராசர் முதல்வராக இருந்த போது மீண்டும் புதிய கூரைப்பேட்டையாக மறு கட்டமைப்பு செய்துள்ளனர் அந்த ஊர் தறப்பு விழா முதல்வர் காமராசர் தலைமையில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது.
17.01.2012 காணும் பொங்கலன்று அண்ணன் அறிவுமதி அழைக்க கூரைப்பேட்டை திரு . கி. தன்வேல் இ.ஆ.ப. (தற்போதைய திட்ட்க்குழு உறுப்பினர் செயலர்) அவர்களை சந்திக்கச்சென்றபோது பழைய ந்னைவுகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது அவர்களின் தம்பி திரு . செல்வராசு அவர்கள் கூரைப்பேட்டை திறப்பு விழா அழைப்பை பொக்கிஷம்போல் காத்துவைத்திருந்தார். அந்த அழைப்பை இங்கே வெளியிடுகிறேன். அது பல செய்திகளைச்சொல்லுகிறது. 50 ஆண்டு வரலாறு சொல்லும் அழைப்பு இது.

9 ஜனவரி, 2012

முறம் சில குறிப்புகள்






இல்லத்தில் பயன்படுத்தும் புழங்கு பொருள்கள் பெரும்பாலும் இன்று நவீன மயமாகியுள்ளன.பல பொருள்கள் காணாமல் போய்விட்டன. துடுப்பு, உரி, விளக்குத்தண்டு, அகப்பை, கழுத்துக்கோல் என்று காணமல் போன பொருள்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றும் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருள்களின் பட்டியலில் முறம் இருக்கிறது. பிலாஸ்டிக் முறங்கள் சந்தைகளுக்கு வந்தாயிற்று இருந்தாலும் மூங்கில் பிளாச்சுகளால் செய்யும் முறங்களுக்கு உள்ள வரவேற்பு அலாதியானது.ஆனால் அதை உற்பத்தி செய்யும் தொழிலாள்ர்கள் நிலைதான் வருந்தத்தக்கது. எங்கள் ஊருக்கு முறம் விற்க வந்த பெரியசாமி (63) அவர்களிடம் பேசிய்போதுதான் அவர்களின் கைத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை அறிந்தேன்.
தொட்டிநாய்க்கர் சமூகத்தைச் சேர்ந்த இவர் முன்னோர்கள் மூன்று தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுளனர்.முறத்தின் பாகங்களையும் செய்முறையையும் அவர் கூறக் கூற வியப்பில் விழிகள் விரிகின்றன ஒரு முறத்தில் இவ்வளவு செய்தியா! ஒரு மூங்கில் கழி முறமாவதற்கு நான்கு நாட்கள் ஆகின்றன. அதற்கு இரண்டு பேர் உழைப்பும் தேவை. ஒரு கழியில் இருபது முறங்கள் செய்யலாம்.

செய் முறை: மூங்கிலை மூன்று தினுசாகப் பிளக்கவேண்டும் .முறத்தைப் புடைப்பதற்காகப் பிடிக்கும் பகுதியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு பிளாச்சுகள் அமைந்திருக்கும். அவற்றுள் வெளிப்பக்கமுள்ள பிளச்சுக்கு சலக்குடி என்று பெயர். இது (1மீ.X1.5செ.மீ.X1செ.மீ.) 1மீட்டர் நீளம், 1 செ.மீ. அகலம், 1 செ.மீ. கனம் என்ற அளவில் அமைந்திருக்கும். அதற்கும் உள் பக்கமுள்ள பிளாச்சுக்கு கம்பை என்று பெயர். இது
(1மீ. X 3 செ.மீ. X 1செ.மீ.) என்ற அளவிலும், முன் பகுதியிலுள்ள பிளாச்சு மூங்குடு எனப்படும் இதன் அளவு
(35 செ.மீX1.5 செ.மீ. X 1 செ.மீ. ) ஆகும். உள் பகுதியில் பின்னலுக்கு பயன்படும் மெல்லிய பிளாச்சு அவுனி எனப்படும் . அளவு (1மீ. X 1 செ.மீ. X 2 மி.மீ.) இவற்றை முதலில் தயாரித்துக்கொண்டு பிறகு ஆண்கள் அடிபோட்டுத் தர பெண்கள் பின்னுவர்.

முறத்தின் படிநிலைகள்:

1.மூங்கில்
2.சிம்பு
3.கம்ப
4.சலக்குடி
5.கட்டாக்கணத் துண்டு
6.அரணி (அடி போடுவதற்கு அரணி எனப் பெயர்)
7.தட்டு ( மூலை வளைப்பதர்கு முன் )
8.அவுந்தியம் ( மூலை வளைத்தபின் )
9.முறம்

முறம் செய்வதற்கான கருவிகள்

1. தட்டு அம்பு
2. வாள் அம்பு
3. கொடுவாள்

மூலப்பொருள்கள்

1.மூங்கில்
2.கட்டுக்கொடி

இருபது முறங்களுக்கான உற்பத்தி செலவு.

ஒரு மூங்கில கழி விலை ரூ. 100-
ஆண் ஆள் கூலி நான்கு நாட்களுக்கு : ரூ. 1200-
பெண் ஆள் கூலி நான்கு நாட்களுக்கு : ரூ. 800-
மொத்த செலவு : ரூ. 2100-
ஒரு முறத்தின் உற்பத்தி செலவு : ரூ. 105-
ஒரு முறம் விற்கும் விலை : ரூ. 75-
நூறு ரூபய்க்கு பஞ்சு வாங்கி நூத்து அம்பது ரூபாய்க்கு வித்தா லபமா நட்டமா என்று ஒரு கணக்கினை எங்கள் ஊரில் கேட்க சிறுவர்களான நாங்கள் லாபம் என்று கூற கணக்கு போட்ட தாத்தா நூத்து என்பதற்கு நூலாக நூத்து என விளக்கியபின் நட்டம் என உணர்வோம். அப்படித்தான் இருக்கிறது முறம் விற்கும் தொட்டி நாய்க்கர் வாழ்க்கை.
நாம் இன்னமும்
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்தொக்கொள்"
என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

4 ஜனவரி, 2012

சித்தன்ன வாசல் பயணம் -2




சித்தன்னவாசல் சமணர் படுக்கைகள்



படுக்கையின் தோற்றம்


படுக்கையை வேலி அமைத்து பாதுகாக்கும் நிலை

3 ஜனவரி, 2012

சித்தன்ன வாசல் பயணம்

அரையாண்டு விடுமுறை புதுக்கோட்டையில்தான் என மனைவி மக்கள் முடிவெடுத்தனர். முதல் நாளே சித்தன்னவாசல் பயணம். அரசு விருந்தினருக்கு உள்ள அத்தனை சிறப்புகளுடன் சென்று வந்தோம். சமணர் குடைவரைக் கோயிலில் உள்ள ஊழியர் மூச்சடக்கி பயிற்சி செய்து காண்பித்தார். ஓம் என்ற ஒலி எழும்பியது வியப்பாக இருந்தது. நானும் முயற்சி செய்து பார்த்தேன் ஒலிதான் வர்வில்லை. பண்பாட்டுக் க்ருவூலமான அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் கல்லூரி இளைஞர்களிடம் இல்லை என்பது தான் வேதனை. சில படங்களை இங்கே காணலாம்.



சித்தன்ன வாசல் ஓவியத்தை அருங்காட்சி யகத்தில் முழுமையாக நகல் எடுத்து வைத்துள்ளுனர்
குடை வரை கோயில் சுவரில் உள்ள சமணர் உருவம்

ஓவியம் சிதைந்த நிலை
















சித்தன்ன வாசல் ஓவியம் தற்போதைய நிலை

குடை வரை கோயில் பற்றிய அறிவிப்பு
மேலே சென்றால் சமணர் படுக்கைகள் எல்லாம் தற்கால காதலர்களால் சிதைக்கப்பட்டுள்ள நிலை. அடுத்த பதிவில் காணலாம்.