இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

30 ஏப்ரல், 2014

பொதுத்துறை நிறுவனங்கள் நல்லதா?




அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிப் படிப்பு. தேர்வுக்கட்டணம் செலுத்த ஏப்ரல் 23 கடைசி தேதி என்று கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. தேர்வுக்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமாம். கடைசி தேதிக்குப்பின் ஏப்ரல் 30 வரை தாமதக்கட்டணம் 500 செலுத்தவேண்டும். அதன் பின்னர் 750 செலுத்தவேண்டும்  , அபராதத்தொகையை 500க்கு மேல் விடக்கூடாது என்பதனால் இன்று எப்படியாவது கட்டணத்தை செலுத்திவிடுவது என்று முடிவெடுத்து பல்கலைக் கழக இணையதளத்தைப் பார்த்தேன்.  இணையவழியாகக் கட்டணம் செலுத்திவிடலாம் என்று பார்த்தால் அந்த வசதி முடக்கப்பட்டிருந்தது. சரி பெரியார் நகரில் உள்ள யூக்கோ வங்கியில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் அங்கு சென்று 2000 ரூபாய்க்கு தரகுத்தொகை எவ்வளவு என்று கேட்டதற்கு 65 ரூபாய் என்றனர். மாட்டுத்தரகர்களை விட மோசமாக வசூலிக்கின்றனரே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். மாநில வங்கியில் 35 ரூபாய்தான் ஆனால் அங்கு சென்றால் ஒரு நாள் ஆகிவிடும் கூட்டம் கண்ணைக்கட்டும். என்பதால் இங்கேயே வாங்கி விடுவோம் என்று முடிவுசெய்து படிவத்தை நிரப்பிக்கொடுத்தால் எங்களுக்கு சிதம்பரத்தில் கிளை இல்லை என்று திருப்பிக்கொடுத்துவிட வேறு வழியின்றி மாநில வங்கிக்கு சென்றேன் .                         ( சென்னையில் மாற்றும்படி எடுக்கலாம் என்பது  பிறகுதான் நமக்குத்தெரிகிறது)நீண்ட வரிசையில் கடைசி ஆளாய் நிற்க நேர்ந்தது.  நண்பகல் 12 மணிக்கு வரிசையில் நின்றேன். நீண்ட நேரம் நின்றும் வரிசை நகர்வதாக இல்லை. வரிசையில் நிற்பவர்கள் புலம்பத்தொடங்கினர். என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பார்க்கலாம் என்றால் பார்க்கிற தொலைவில் இல்லை. சகித்துக்கொண்டு நின்றேன். முன்னால் நின்றவர் ,”என்ன சார் வேல பாக்குறாங்க. தடுமாறிகிட்டு. தனியார் பேங்குல எல்லாம் இளைஞர்களை வேலைக்கு வச்சிருக்காங்க ஒரு நிமிடத்துல வேலை முடியுது. அரசாங்க பேங்குல இதுதான் தொல்ல”. என்றார். பக்கத்து வரிசை கிடு கிடுவென நகர்ந்துகொண்டிருந்தது. எங்களுக்கு பிறகு வந்தவர்களெல்லாம் வேலை முடிந்து சென்றுகொண்டிருந்தனர். மணி ஒன்று ஆனது மெல்ல மெல்ல நகர்ந்து எனக்கு முன்னால் ஒரு 5 பேர்தான் நின்றுகொண்டிருந்தனர் சற்றே ஆறுதலடைந்தேன். இப்போது அந்த அலுவலரின் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு 57 வயது இருக்கும் சொட்டை மண்டை கண்ணாடி மட்டிக்கொண்டு கணினி திரையையும் விசைப்பலகையையும் உற்று உற்று பார்த்துக்கொண்டு ஒற்றை விரலால் எழுத்துகளைத் தேடித்தேடி தட்டியதைப் பார்த்தால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. என்ன செய்வது இவரிடம் இவ்வளவு பேர்  மாட்டிக்கொண்டோமே? எனக்குமுன்னால் இன்னும் இரண்டு பேர்தான். மணியோ 1.20 இன்னும் பத்துநிமிடத்தில் நம் முறை வந்துவிடுமா? பக் ..பக்...  என் முறை வருகிறது அவர் சாப்பிட எழுந்து சென்று விடுகிறார். இப்படி ஒரு காட்சி கண் முன்னே தோன்றுகிறது. எல்லாம் முன் அனுபவம்தான். நல்ல வேளை இன்று அப்படி ஒன்றும் ஆகிவிடவில்லை. 2.30க்கு பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூற, வீட்டுக்கு வந்து சாப்பிட்டு 3.00 மணிக்கு சென்றேன். வரைவோலையைப் பெற்றுக்கொண்டு. அஞ்சல் நிலையத்திற்கு சென்றால் 3.30. அங்கும் ஒரு நீளமான வரிசை. நம்ம நேரம் எங்கு சென்றாலும் வரிசை நீளமாகத்தான் இருக்கிறது.அதை விடக்கொடுமை காலையில் வங்கியில் பார்த்த அலுவலருக்கு அண்ணன் போல ஒருவர் அதே ஒற்றை விரலால் எழுத்துகளைத்தேடிக்கொண்டிருந்தார். இங்கு தபால் மட்டுமல்ல மின்சாரக்கட்டணம் கட்டுவதற்கும் பலர் நின்று கொண்டிருந்தனர் என்ன கொடும சார்?
மக்களுக்கு நல்லது செய்யுறோம்னு இப்படியா ஆப்பு அடிப்பிங்க. என் முறை வரும்போது 4.00 மணி . இதுக்குப் பிறகு பதிவு அஞ்சல் அனுப்ப முடியாதுன்னு சொல்லிடுவாங்களோ? நல்ல வேளை அப்பிடி ஒன்னும் சொல்லல.ஒரு வழியா விண்ணப்பம் அனுப்பியாச்சு.
அப்புறந்தான் தோணிச்சு. இங்க வரிசையில் நின்ற நேரத்துக்கு நேரா சிதம்பரமே போயி பணத்தைக் கட்டி விண்ணப்பத்த பெட்டியிலெயே போடிருக்கலாம்.
 பொதுத்துறை நிறுவனங்கள்தான் நல்லது, யாருக்கு? மக்களுக்கா அங்கு பணியாற்றுபவர்களுக்கா?