இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

26 நவம்பர், 2013

கரகாட்டக்கலை.

                                                     
                                                        மாலா,ரவிராஜன்

                                                           
                                                  ஒப்பனையில் மாலா

                                                 
                                                   வழிபாட்டு சடங்கில் தாள் கரகம்

தலையில் கரகம் சுமந்து செல்வது நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றாகும். குறிப்பாக கிராமக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மகாபாரதம் கதைப்பாடல் வடிவத்தில் நிகழ்த்தப்படும்போது முதல் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டும் விழா நடைபெறும் அதனைத் தொடர்ந்து பதினெட்டு நாட்களும் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும். அப்போது முதல் நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக தாள் கரகம்  சோடித்தல் அமையும். (தாள் கரகம் என்பது குடத்தின் வாய்ப்பகுதியில் பல்வேறு வண்ணத்தாள்களால் செய்யப்பட்ட முக்கோண வடிவ கொடிகள் ஒட்டப்பட்ட குச்சிகள் செறுகப்பட்டிருக்கும்). பக்தர்  ஒருவர் அதைத் தலையில் சுமந்து வருவது  உண்டு.  அதுபோலவே தீமிதித்திருவிழாவன்று அக்கினி கரகம்(மண் பானையில் மரக்கட்டைகளை இட்டு தீ மூட்டி தகதகவென எரியவிடுவர். தீ, பானையின் வாய் வழியே நாவை நீட்டும்) எனப்படும் தீக்கரகத்தைச் சுமந்து வருவதும் வழக்கம்.கரகம் சுமப்பது என்ற வழக்கம் ஒரு வழிபாட்டு மரபாக இருந்துள்ளது.
இத்தகையதொரு வழிபாட்டுச் சடங்கு நாளடைவில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று ஒரு நிகழ்த்து கலையாக வளர்ந்துள்ளது. தலையில் கரகம் சுமந்து ஆடும் ஆட்டம் கரகாட்டம் என்றாலும்  கலைஞர்களின் தனித்திறமைக்கேற்ப பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது இக்கலை. கரகாட்டக்கலை இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு கலை என்றாலும் அக்கலைஞர்களின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி  கலைகளை பெரிதும் பாதித்துள்ளது, என்றாலும் அதையே சாதகமாக மாற்றிக்கொள்ளும் கலைஞர்களும் உண்டு. தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் ,எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்தவேண்டிய தேவையை இன்று கட்டாயமாகியிருக்கிறது. கலைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல . நாட்டுப்புற கலைகள் அந்தக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அக்கலைஞர்கள் தொடர்ந்து வாழ்க்கையை நடத்துவதற்கு கலை நிகழ்ச்சிகளைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். அதிலும் போட்டிகள் உண்டு. எனவே ஒவ்வொரு கலைக்குழுவும் தங்கள் குழுவை நிலை நிறுத்த விளம்பரப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தஞ்சாவூர் கிழக்கு வாசல் பகுதியில் கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் என பல குழுக்கள் தங்கள் கலைக்கான விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
என்னதான் விளம்பரப்படுத்தினாலும் இதுபோன்ற கலைகள் கோயில் திருவிழாக்களை நம்பியே உள்ளன. அதில் ஈடுபடும் கலைஞர்கள் உரிய முறையில் கெளரவிக்கப்படுவதில்லை. ஓலைக் குடிசைகளில்தான் அவர்களின் வாழ்க்கை கழிகிறது. நாம் அந்த கலைகளின் சிறப்பைப் பேசுவதால் அவர்களின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.  கலை அவர்களை வாழவைக்கிறதோ இல்லையோ அவர்கள் கலைகளை வாழவைத்துக்கொண்டுள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை. நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். அரசு அவர்களுக்கென்று நல வாரியம் அமைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
கலை கலையாக மட்டும் இல்லாமல் அதில் பல நுண் அரசியல் இயங்குகிறது. அவற்றையெல்லாம் மீறியும் பல கலைஞர்கள் பல்வேறு கலைகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள ஊ.மங்கலம் கிராமத்தில் உள்ள கரகாட்டக் கலைஞர் மாலா.இவர் பிறந்தது பண்ருட்டி அருகிலுள்ள தண்டுப்பாளையம் . தற்போது கணவர் தமிழ்ச்செல்வனோடு ஊ.மங்கலத்தில் வாழ்ந்து வருகிறார்.
மாலாவின் பெற்றோர் தொடக்கத்தில் கரகாட்டம் ஆடுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவருக்குள்ளிருந்த கலை உணர்வை யாராலும் தடுக்க இயலவில்லை. பத்து ஆண்டுகள் கரகாட்ட அனுபவம் பெற்ற தேர்ந்த கலைஞராக ஆடச் செல்லுமிடங்களிலெல்லாம் பார்வையாளர்களின் பாராட்டைப்பெற்று வருகிறார் மாலா. கரகத்தைத் தலையில் சுமந்தபடி தீப்பந்தத்தினுள் செல்வது, குழல் விளக்குகளை உடைப்பது என தன் தனித்திறமைகளை இக்கலையோடு இணைத்து பார்வையாளர்களைப் பரவச்ப்படுத்துவது மாலாவின் வழக்கம்.
இவருடன் இணைது ஆடும் ஆண் கலைஞர் ரவிராஜ். இவரும்  அதே ஊரைச் சேர்ந்தவர். இவர் முதலில் குறவன் குறத்தி ஆட்டத்தைத்தான் ஆடியுள்ளார் பிறகு தானாகவே கரகாட்டம் கற்றுக்கொண்டு இன்று கரகாட்டக் கலைஞராக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிப்பருவத்திலேயே ஆட்டத்தில் நாட்டம் கொண்டவர். பள்ளிக்கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப்பெற்றவர்.
இவருக்கு திருமணம் ஆகும் வரை  இக்கலையில் ஈடுபட எவ்வித எதிர்ப்பும் இல்லை. அதன் பிறகு இவர் மனைவிக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் ஆடிப்பழகிய ர்வியால் வேறு வேலைகளில் ஈடுபடமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி இவரது ஆட்டம் இவரின் மனைவிக்கும் பிடித்துப்போக தொடர்கிறது கலைச் சேவை.
இப்படித்தான் பல கலைஞர்கள் கலைவாழ்க்கைக்கு தங்களை அற்பணித்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்த இயலவில்லை என்றாலும் அவமானப் படுத்தாமலிருக்கவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாக இருக்கிறது.

23 ஜூலை, 2013

கணித ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி


விருத்தாசலத்தில் தேசிய  இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் கணித ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
           பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள்

                           கருத்தாளர்கள்

23 ஜூன், 2013

வே.சபாநாயகம் சில குறிப்புகள்






 பிறப்பு :           2 - 3- 1935.

 பிறந்த ஊர்:       தெ.வ.புத்தூர், விருத்தாசலம் வட்டம்,
                     கடலூர் மாவட்டம் - தமிழ்நாடு.

 படிப்பு:           இளங்கலை - கணிதம், முதுகலை - தமிழ்,
                      முதுகலை - கல்வி இயல்.

 பணி:            முன்னாள் முதுநிலை விரிவுரையாளர்,  
                                        ஆசிரியர் பயிற்சி.

எழுதியுள்ள நூல்கள்: 33

தொகுப்பு நூல்கள் :  5 (கணையாழி களஞ்சியம்,
                                                  தீபம் இதழ் தொகுப்பு (2)
                          ஞானரதம் இதழ் தொகுப்பு,
                                                   ஞானரதத்தில் ஜெயகாந்தன்)

 புனை பெயர்கள்  :  சபா, அவைமுதல்வன்.

 பெற்ற பரிசுகள், விருதுகள்  :  
                                            1981-குழந்தை எழுத்தாளர் சங்க -   'ஏ.வி.எம்              
                                            அறக்கட்டளை' யின் தங்கப் பதக்கம்.
                
                                           1982 - ஆனந்தவிகடன் நடத்திய ஜாக்பாட்  
                                           சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.

                                           1983 - அமுதசுரபி 'அமரர் சின்னி கிருஷ்ணன்  
                                           நினைவு சிறுகதைப் போட்டி பரிசு.

                                          1994 - கோவை கஸ்தூரி சீனிவாசன்   
                                           அறக்கட்டளையின் நாவல் பரிசு 10000/- ரூ.

                                     1994 - கோவை வள்ளியப்பா சிறுகதை விருது.

                                      1 995 - 'தமிழரசி' இதழின் மாவட்ட சிறுகதைப்
                                    போட்டியில் முதற் பரிசு.

                                    1975, 1984, 1994 ஆண்டுகளில் 'கணையாழி'யின்
                                    'தி.ஜா நினைவு குறுநாவல்போட்டி'யில்
                மூன்று முறை பரிசு. 


                                      1996 - தமிழக அரசின் 'தமிழ் வளர்ச்சிக்
                                     கழகத்'தின் குழந்தை இலக்கியத்துக்கான
                                     முதற்பரிசு.

                                       1998 - திருப்பூர் தமிழ் சங்க குழந்தை
                                      இலக்கியத்துக்கான முதற்பரிசு.

                                        1999 - பாரத ஸ்டேட் வங்கியின் குழந்தை
                                       இலக்கிய பரிசு.

 பிற தகவல்கள்:    
                                  முதல் படைப்பு 1950ல் பள்ளி இறுதி வகுப்பு
                                   படிக்கையில் 'ஆனந்த போதினி'யில் பிரசுரம்.
                 
                                   1957ல் ஆனந்தவிகடனின் முதல் மாணவர்
                                  திட்டத்தில் தேர்வு.

 அறிந்த பிறகலைகள்:
                                  ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, பேச்சுக்கலை.

                                               
 இதுவரை வெளியாகி உள்ள நூல்கள்.

சிறுகதைத் தொகுப்புகள் (3)

1. குழந்தைத் தெய்வம் - மனோன்மணி புத்தக நிலையம்.......1970.
2. அசலும் நகலும்     -                                 
3. குயிற் குஞ்சு        - மணியம் பதிப்பகம்           .......1991

நாவல் (1)

ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது மணியம் பதிப்பகம்  .......1993.

(!994ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10000ரூ.பரிசு பெற்றது)

குறுநாவல்கள்(3)

1. ஸ்காலர்ஷிப்       - முத்து பதிப்பகம்.              ......1980 2..இனியொருதடவை  - மணியம் பதிப்பகம்            ......1996
3. தென்றலைத்தேடி   -                             .......1997

சிறுவர் இலக்கியம் (19)

1.விதியை வென்றவள் (வாழ்க்கை வரலாறு)            .....1982
                       - எழுத்தாளர் பதிப்பகம்.
(1982ஆம் ஆண்டின் குழந்தை இலக்கியப் போட்டியில் ஏ.வி.எம் அறக்கட்டளையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது)   

2. ஒரு பாப்பாவும், ஒரு கோழியும் ஒரு காகமும்         ....1987
  (சிறு கதைகள்) இலக்குமி நிலையம்.
3. காந்தித் தாத்தா வழியில்( சிறுகதைகள்) விசாலாடசி  .....1993
 (1994ல் கோவை வள்ளியப்பா சிறுகதை விருது பெற்றது)
4. பாப்பாவின் தோழன்(சிறுகதைகள்) அருள் புத்தக நிலையம்    .....1995
5. குறள் வந்த கதைகள்(சிறுகதைகள்)         .          ...1994
6. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் விசாலாட்சி   .....1992
7. கவிதை சொல்லும் கதைகள் இலக்குமி நிலையம்     ...1993
8. சிந்திக்க சில நீதிக்கதைகள் -                         ....1994
9. வல்லவனுக்கு வல்லவன் மணியம் பதிப்பகம்        .....1996
  (1998ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சிக் கழக முதல் பரிசு)
10.தொந்திமாமா சொன்ன கதைகள்மணியம் பதிப்பகம்    .....1993
11.தேசதேசக் கதைகள் அருள் நிலையமம்                 .....1992
 (திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற்பரிசு பெற்றது)
12. எழுசியூட்டும் கதைகள்  - மணியம் பதிப்பகம்.        ......1999
     (1999ல் பாரத ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.)
13. நெஞ்சு பொறுக்குதிலை நாவல் இலக்குமி நிலையம்....1991
14. உயிர்களிடத்து அன்பு வேண்டும்சிறுகதைகள்-மணியம்.....2001
15. சிறுவர் நீதிக்கதைகள் அநுராகம் வெளியீடு          .....2002
16. அன்பின் மகத்துவம் சிறுகதைகள்அருந்ததி பதிப்பகம்....2003
17. அக்கரைப்பச்சை     -                             .....2003
18. சொர்க்கமும் நரகமும் -         - மணியம் பதிப்பகம்....2006
19. சிந்தனைக்குச் சில கதைகள்அருள் புத்தக நிலையம் .......2002   .

திறனாய்வு(2)

1. தீபம் இலக்கியத்தடம்  - மணியம் பதிப்பகம்          .....2000
2. பூவண்ணனின் புதினத்திறன் சாதனா பதிப்பகம்.      ......2004

தொகுப்பு நூல்கள் (5)

1. கணையாழி களஞ்சியம்  - கலைஞன் பதிப்பகம்        ....2000
2. தீபம் இதழ்த் தொகுப்பு I              “                                                 ….2004
3.                     “                           -   II            “                             ...2004
4. ஞானரதத்தில் ஜெயகாந்தன் - எனி இந்தியன் பதிப்பகம் ...2006
5.. ஞானரதம் இதழ்த் தொகுப்பு -                        ....2007

                 



           

                                   

                       








9 ஜூன், 2013

மரத்தை வளர்த்தவன்



பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் சாரண மாணவர்களைக் கொண்டு நட்ட மரம்... இன்று பூத்துக்குலுங்குவதைப் பார்க்க மனத்தில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்குகிறது.

இதைக்கூறும்போது நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

மரத்தை வளர்த்தவன்

மரம் ஒன்றை நட்டு
தண்ணீர் ஊற்றினான்
ஒருவன்

அது வளர்ந்து
தழைத்து
வருவோர்க்கெல்லாம்
நிழலைத் தந்தது

மரத்தைத் தான்தான்
வளர்த்ததாய்ப் பீற்றிக்கொண்டவனுக்கு
நிழலுக்கு ஒதுங்கியவர்கள்
வழங்கிச்சென்றனர்
மகராசன் பட்டத்தை

எதுவும் பேச இயலாமல்
நின்று கொண்டிருந்தது
மரம்.

(இடம் : சலீம் அலி பூங்கா, தங்கம் நகர், விருத்தாசலம்.)

14 மே, 2013

சபாநாயகம் 80



அன்புடையீர் வணக்கம்,
           எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களுக்கு 80 வயது நிறைவடைகிறது.அதனைச் சிறப்பாக்க் கொண்டாடும் விதமாக எழுத்தாளர்கள் நண்பர்கள், அவரிடம் பயின்ற மாணவர்கள் ஒருங்கிணைந்து விருத்தாசலத்தில்  விழா நடத்த வும், அந்த             விழாவில் சிறப்பு மலர்ஒன்று வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.
 விழாகுறித்தும்,மலர் குறித்தும் தங்களின் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறோம். அம் மலரில் இடம்பெறுவதற்கு தங்களின் கட்டுரையினை அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.
 கட்டுரைகள் வே.சபாநாயகம் அவர்களின் இலக்கிய பங்களிப்பு
 குறித்தும்அவரது படைப்புகள் குறித்த திறனாய்வாகவும்  அமையலாம்.                                                 அவரைப்பற்றிய நினைவுக்குறிப்புகள்,அரிய செய்திகள், நிழற்படங்களையும் அனுப்பிட வேண்டுகிறோம்படைப்புகளை 15/06/2013 க்குள் அனுப்பி மலர் தயாரிக்கவும்         விழா சிறப்பாக நடைபெறவும்  ஒத்துழைக்க வேண்டுகிறோம்விழா தொடர்பாக தங்களைத் தொடர்புகொள்வதற்கு தங்களின் அலைபேசி எண்ணை விழாக்குழுவிற்கு வழங்கிட
வேண்டுகிறோம். மின்னிஞ்சல் மூலம் படைப்புகளை அனுப்புவோர் ஒருங்குறி (Unicode Font) எழுத்துருவில்அனுப்பவும்.
                                                                                                            தொடர்பு முகவரி
                                                                                                            இரத்தின புகழேந்தி
                                                                                                            18, தங்கம் நகர்
                                                                                                            பூதாமூர்
                                                                                                            விருத்தாசலம் – 606 001.
                                                                                                                                    
                                                                                                               pugazhvdm@gmail.com
                                                                            பேசி: 9942646942, 9942347079, 948848519
தலைவர்
கவிஞர்த.பழமலை

செயலாளர்
கவிஞர் பல்லவிகுமார்

விழாக்குழு
முனைவர் சு.அமிர்தலிங்கம்
கவிஞர் பட்டி செங்குட்டுவன்
கவிஞர் கரிகாலன்
எழுத்தாளர் இமையம்
முனைவர் இரத்தினபுகழேந்தி
வழக்கறிஞர் மெய்கண்டநாதன்
கவிஞர் ஆறு.இளங்கோவன்
கவிஞர் சுந்தரபாண்டியன்
கவிஞர் இளந்திரையன்
எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன்
எழுத்தாளர் எஸ்ஸார்சி
எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி
ஆர்.கிருஷ்ணமூர்த்தி
எம்.இராமலிங்கம்
முனைவர் ஜெ.விருத்தகிரி
சு.சம்பந்தம் மணியம் பதிப்பகம்
ரெங்கப்பிள்ளை செய்தியாளர்
.ரமேஷ்பாபு
கவிஞர் கண்மணிகுணசேகரன்
பூ.ராசேந்திரன்
தீ.கோ.நாராயணசாமி
பிரவிண்குமார்
கவிஞர் செ.அமிர்தராஜ்
அ.அக்பர்
அ.செந்தில்குமார்
பி.மதியழகன்
மலர் வெளியீடு
நரி.அரி.கிருஷ்ணமூர்த்தி
அகிலா பதிப்பகம்
கழுகு எம்.இராமலிங்கம்
நிவேதிதா பதிப்பகம்