இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

23 ஜூன், 2013

வே.சபாநாயகம் சில குறிப்புகள்






 பிறப்பு :           2 - 3- 1935.

 பிறந்த ஊர்:       தெ.வ.புத்தூர், விருத்தாசலம் வட்டம்,
                     கடலூர் மாவட்டம் - தமிழ்நாடு.

 படிப்பு:           இளங்கலை - கணிதம், முதுகலை - தமிழ்,
                      முதுகலை - கல்வி இயல்.

 பணி:            முன்னாள் முதுநிலை விரிவுரையாளர்,  
                                        ஆசிரியர் பயிற்சி.

எழுதியுள்ள நூல்கள்: 33

தொகுப்பு நூல்கள் :  5 (கணையாழி களஞ்சியம்,
                                                  தீபம் இதழ் தொகுப்பு (2)
                          ஞானரதம் இதழ் தொகுப்பு,
                                                   ஞானரதத்தில் ஜெயகாந்தன்)

 புனை பெயர்கள்  :  சபா, அவைமுதல்வன்.

 பெற்ற பரிசுகள், விருதுகள்  :  
                                            1981-குழந்தை எழுத்தாளர் சங்க -   'ஏ.வி.எம்              
                                            அறக்கட்டளை' யின் தங்கப் பதக்கம்.
                
                                           1982 - ஆனந்தவிகடன் நடத்திய ஜாக்பாட்  
                                           சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.

                                           1983 - அமுதசுரபி 'அமரர் சின்னி கிருஷ்ணன்  
                                           நினைவு சிறுகதைப் போட்டி பரிசு.

                                          1994 - கோவை கஸ்தூரி சீனிவாசன்   
                                           அறக்கட்டளையின் நாவல் பரிசு 10000/- ரூ.

                                     1994 - கோவை வள்ளியப்பா சிறுகதை விருது.

                                      1 995 - 'தமிழரசி' இதழின் மாவட்ட சிறுகதைப்
                                    போட்டியில் முதற் பரிசு.

                                    1975, 1984, 1994 ஆண்டுகளில் 'கணையாழி'யின்
                                    'தி.ஜா நினைவு குறுநாவல்போட்டி'யில்
                மூன்று முறை பரிசு. 


                                      1996 - தமிழக அரசின் 'தமிழ் வளர்ச்சிக்
                                     கழகத்'தின் குழந்தை இலக்கியத்துக்கான
                                     முதற்பரிசு.

                                       1998 - திருப்பூர் தமிழ் சங்க குழந்தை
                                      இலக்கியத்துக்கான முதற்பரிசு.

                                        1999 - பாரத ஸ்டேட் வங்கியின் குழந்தை
                                       இலக்கிய பரிசு.

 பிற தகவல்கள்:    
                                  முதல் படைப்பு 1950ல் பள்ளி இறுதி வகுப்பு
                                   படிக்கையில் 'ஆனந்த போதினி'யில் பிரசுரம்.
                 
                                   1957ல் ஆனந்தவிகடனின் முதல் மாணவர்
                                  திட்டத்தில் தேர்வு.

 அறிந்த பிறகலைகள்:
                                  ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, பேச்சுக்கலை.

                                               
 இதுவரை வெளியாகி உள்ள நூல்கள்.

சிறுகதைத் தொகுப்புகள் (3)

1. குழந்தைத் தெய்வம் - மனோன்மணி புத்தக நிலையம்.......1970.
2. அசலும் நகலும்     -                                 
3. குயிற் குஞ்சு        - மணியம் பதிப்பகம்           .......1991

நாவல் (1)

ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது மணியம் பதிப்பகம்  .......1993.

(!994ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10000ரூ.பரிசு பெற்றது)

குறுநாவல்கள்(3)

1. ஸ்காலர்ஷிப்       - முத்து பதிப்பகம்.              ......1980 2..இனியொருதடவை  - மணியம் பதிப்பகம்            ......1996
3. தென்றலைத்தேடி   -                             .......1997

சிறுவர் இலக்கியம் (19)

1.விதியை வென்றவள் (வாழ்க்கை வரலாறு)            .....1982
                       - எழுத்தாளர் பதிப்பகம்.
(1982ஆம் ஆண்டின் குழந்தை இலக்கியப் போட்டியில் ஏ.வி.எம் அறக்கட்டளையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது)   

2. ஒரு பாப்பாவும், ஒரு கோழியும் ஒரு காகமும்         ....1987
  (சிறு கதைகள்) இலக்குமி நிலையம்.
3. காந்தித் தாத்தா வழியில்( சிறுகதைகள்) விசாலாடசி  .....1993
 (1994ல் கோவை வள்ளியப்பா சிறுகதை விருது பெற்றது)
4. பாப்பாவின் தோழன்(சிறுகதைகள்) அருள் புத்தக நிலையம்    .....1995
5. குறள் வந்த கதைகள்(சிறுகதைகள்)         .          ...1994
6. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் விசாலாட்சி   .....1992
7. கவிதை சொல்லும் கதைகள் இலக்குமி நிலையம்     ...1993
8. சிந்திக்க சில நீதிக்கதைகள் -                         ....1994
9. வல்லவனுக்கு வல்லவன் மணியம் பதிப்பகம்        .....1996
  (1998ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சிக் கழக முதல் பரிசு)
10.தொந்திமாமா சொன்ன கதைகள்மணியம் பதிப்பகம்    .....1993
11.தேசதேசக் கதைகள் அருள் நிலையமம்                 .....1992
 (திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற்பரிசு பெற்றது)
12. எழுசியூட்டும் கதைகள்  - மணியம் பதிப்பகம்.        ......1999
     (1999ல் பாரத ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.)
13. நெஞ்சு பொறுக்குதிலை நாவல் இலக்குமி நிலையம்....1991
14. உயிர்களிடத்து அன்பு வேண்டும்சிறுகதைகள்-மணியம்.....2001
15. சிறுவர் நீதிக்கதைகள் அநுராகம் வெளியீடு          .....2002
16. அன்பின் மகத்துவம் சிறுகதைகள்அருந்ததி பதிப்பகம்....2003
17. அக்கரைப்பச்சை     -                             .....2003
18. சொர்க்கமும் நரகமும் -         - மணியம் பதிப்பகம்....2006
19. சிந்தனைக்குச் சில கதைகள்அருள் புத்தக நிலையம் .......2002   .

திறனாய்வு(2)

1. தீபம் இலக்கியத்தடம்  - மணியம் பதிப்பகம்          .....2000
2. பூவண்ணனின் புதினத்திறன் சாதனா பதிப்பகம்.      ......2004

தொகுப்பு நூல்கள் (5)

1. கணையாழி களஞ்சியம்  - கலைஞன் பதிப்பகம்        ....2000
2. தீபம் இதழ்த் தொகுப்பு I              “                                                 ….2004
3.                     “                           -   II            “                             ...2004
4. ஞானரதத்தில் ஜெயகாந்தன் - எனி இந்தியன் பதிப்பகம் ...2006
5.. ஞானரதம் இதழ்த் தொகுப்பு -                        ....2007

                 



           

                                   

                       








9 ஜூன், 2013

மரத்தை வளர்த்தவன்



பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் சாரண மாணவர்களைக் கொண்டு நட்ட மரம்... இன்று பூத்துக்குலுங்குவதைப் பார்க்க மனத்தில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்குகிறது.

இதைக்கூறும்போது நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

மரத்தை வளர்த்தவன்

மரம் ஒன்றை நட்டு
தண்ணீர் ஊற்றினான்
ஒருவன்

அது வளர்ந்து
தழைத்து
வருவோர்க்கெல்லாம்
நிழலைத் தந்தது

மரத்தைத் தான்தான்
வளர்த்ததாய்ப் பீற்றிக்கொண்டவனுக்கு
நிழலுக்கு ஒதுங்கியவர்கள்
வழங்கிச்சென்றனர்
மகராசன் பட்டத்தை

எதுவும் பேச இயலாமல்
நின்று கொண்டிருந்தது
மரம்.

(இடம் : சலீம் அலி பூங்கா, தங்கம் நகர், விருத்தாசலம்.)