இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

22 நவம்பர், 2009

கல்பாரி


பாரி என்றால் கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் என்று பொருள். தரையில் செவ்வக வடிவில் கோடு கிழித்து அதனுள் குறுக்கு நெடுக்காக இரு கோடுகள் அமைத்து கோடுகள் வெட்டுமிடத்தில் ஒரு சிறு வட்டம் வரைந்து அதில் நான்கு கற்களை வைத்து கட்டத்திற்கு ஒருவர் வீதம் நான்கு பேர் நிற்க நடுக்கோட்டில் ஒருவன் நின்று கட்டத்திற்குள்ளிருப்போர் கற்களை எடுத்துச்சென்று விடாமல் காவல் காக்கும் விளையாட்டு கல்பாரி. காவலாளியிடம் அடி படாமல் கற்களை எடுத்துவிட்டால் ஆட்டத்தில் வென்றதாக பொருள்.
பயன்கள்: உழைத்து பொருளீட்ட வேண்டும், ஈட்டிய பொருளில் தம் தேவை போக எஞ்சியதை பிறருக்கு கொடுத்து உதவுதல் ஆகிய பண்புகளைச் சிறுவர்களிடம் வளர்க்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக