இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

29 நவம்பர், 2009

கண்ணாமூச்சி



சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் விளையாடும் விளையாட்டு. ஒரு சிறுவனின் கண்ணை மற்றொருவன் பொத்த பிறர் ஒளிந்து கொள்ள ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு. கண்ணைப்பொத்தியிருப்பவனோடு கீழ்க்கண்டவாறு உரையாடல் நடைபெற்று முடிந்த பிறகு கண்ணைத்திறந்துவிடவேண்டும்.

உரையாடல்: கண்ணாமூச்சி காதடைப்பு

உங்க வீட்டுல என்னா சோறு?

நெல்லு சோறு

ஈ உழுந்துதா, எறும்பு உழுந்துதா?

எறும்பு உழுந்துது

எடுத்துட்டு சாப்பிட்டியா, எடுக்காம சாப்பிட்டியா?

எடுத்துட்டு சாப்பிட்டேன்

காட்டுக்கு போயி ஒரு சிங்கம், ஒரு புலி,

ஒரு கரடி எல்லாம் புடிச்சிகிட்டு வா...
கண்பொத்தி ஆடும் மரபு சங்ககாலந்தொட்டே தமிழர்களிடமிருந்திருப்பதைக் கீழ்க்கண்ட பாடல்கள் உணர்த்துகின்றன.
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன

நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே! (ஐங்குறுநூறு)கண் புதையாக் குறுகிப் பிடிக்கை அன்ன...(அகநாநூறு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக