இரத்தின புகழேந்தி நூல்கள்

Loading...

18 ஜனவரி, 2012

புதிய கூரைப் பேட்டை




நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பல சிற்றூர்களை விழுங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று கூரைப்பேட்டை. அந்த ஊரை காமராசர் முதல்வராக இருந்த போது மீண்டும் புதிய கூரைப்பேட்டையாக மறு கட்டமைப்பு செய்துள்ளனர் அந்த ஊர் தறப்பு விழா முதல்வர் காமராசர் தலைமையில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது.
17.01.2012 காணும் பொங்கலன்று அண்ணன் அறிவுமதி அழைக்க கூரைப்பேட்டை திரு . கி. தன்வேல் இ.ஆ.ப. (தற்போதைய திட்ட்க்குழு உறுப்பினர் செயலர்) அவர்களை சந்திக்கச்சென்றபோது பழைய ந்னைவுகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது அவர்களின் தம்பி திரு . செல்வராசு அவர்கள் கூரைப்பேட்டை திறப்பு விழா அழைப்பை பொக்கிஷம்போல் காத்துவைத்திருந்தார். அந்த அழைப்பை இங்கே வெளியிடுகிறேன். அது பல செய்திகளைச்சொல்லுகிறது. 50 ஆண்டு வரலாறு சொல்லும் அழைப்பு இது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக