இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

10 செப்டம்பர், 2011

இன்றும் தொடரும் சடங்குகள்

தமிழர் திருமணங்களில் இன்றும் சில சடங்குகள் தொடர்கின்றன. தமிழர் திருமணம் என்று பொதுவாக கூறிவிட முடியாது. இருப்பினும் நாட்டுப்புற மக்களிடம் குறிப்பாக வன்னியர்களிடம் இன்றுவரை தொடரும் சடங்கு பாலி விடுவது. இது வேளாண்மைத் தொழிலின் எச்சமாகப் பார்க்கப் படுகிறது. நவதானியங்களை முளைக்க வைத்து திருமணத்தன்று நீர் நிலைகளில் விடுவதே இச்சடங்கு.கல்யணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முது மொழி. வேளாண்மையோடு தொடர்புடைய சமூகத்தின் வெளிப்பாடுகளாக பழமொழியும் இச்சடங்கும் தோன்றுகின்றன.
           நேற்று என் அக்காள் மகன் சிங்கத்தமிழன் திருமணத்தில் இச்சடங்குக்காக திருமுதுகுன்றம் தெப்பக்குளத்திற்கு சென்றோம் அங்கு குடிமகன்களின் நற்செயலால் உடைந்து கிடந்த மதுபாட்டில்களுக்கிடையே நடனமாடியபடி சென்று ஒருவழியாக முளைப்பாரியை குளத்தில் கரைத்தோம். அரசாணி கழியையும் நட்டோம். தானியங்களை முளைக்க வைப்பது அரசங்குச்சியை நட்டு வைப்பதும் இயறகையை அழகு செய்யும் ஒரு வழிமுறையாக இருக்கலாம்.
         அடுத்த சடங்கு சாலும் கரகம் என்பது .இது மணமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கான சடங்காகும். இது தமிழரின் விளையாட்டு மரபைப் பறை சாற்றும் சடங்காகப் பார்க்கலாம். விளையாட்டின் வாயிலாக நாடுகளிடையே மட்டுமின்றி மனித மனங்களுக்கிடையேயும் நல்லுறவு உருவாகும் என்பதற்கு இச்சடங்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மணக்கோலத்தில் மருத்துவர் சிங்கத்தமிழன், மருத்துவர் கயல்விழிதேவி, மணமகள் பெற்றோர் எழில்ராணி குணசேகரன் மணமகன் பெற்றோர் சுசிலா குமார்.
தெப்பக் குளத்தில் பாலிவிடும் மணமக்கள்
அரசாணி நடும் மணமக்கள்
சாலும் கரகம் விளையாடும் மணமக்கள்
1979 இல் மணமகன் பெற்றோர் குமார் சுசிலா திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களோடு.. இடமிருந்து நிற்பவர்கள் இரத்தின புகழேந்தி, பெரியம்மா ராஜாமணி, பெரியப்பா தனபால், மணமக்கள், எம்.ஜி.ஆர்., பண்ருட்டியார், சி.இராமநாதன்,சின்னப்பொண்ணு.              

 இப்பதிவிலுள்ள படங்களில் சில வரலாறுகள் உண்டு . மணமகனின் பெற்றோரின் திருமணத்தை அன்றைய முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர். தான்) நடத்திவைத்தார். அப்போது (1979)திருமண மண்டபங்கள் கிடையாது. எனவே சன்தோஷ்குமர் திரையரங்கில் திருமணம் நடைபெற்றது. மணமகன் தந்தை திரு சி.இராமநாதன் அப்போது விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்தேன். (கண்களை மூடியபடி மேடையில் நிற்கும் சிறுவன் நான்தான்)அவர்களின் மகன் திருமணம் இப்போது என் மகன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். 

1 கருத்து:

  1. நல்லது நண்பரே, புரோகிதம் உண்டா எனச் சொல்லவில்லையே,ஓ அதுதான் தமிழர் திருமணம் என்று சொல்லமுடியாது என்று சொன்னீர்களா, புரோகித மருப்பு இருக்கும் என்று கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு