இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

14 ஏப்ரல், 2009

ராசபக்சேவுக்கு சாமிதான் தண்டனை கொடுக்கவேண்டும்.

"அருள்மிகு வேட்ப்பர் துணை"

கொலைகாரன் ராசபக்சேவுக்கு தண்டனை வேண்டி வேடப்பர் கோயிலில் சீட்டு எழுதிகட்டிய படைப்பளிகள்.
நாட்டுப்புற மக்கள் தங்களுக்கு நேரும் துன்பங்களைக் கேட்பாரற்ற போது தங்களின் குல தெய்வத்திடம் சீட்டு எழுதிக்கட்டுவது மரபு.அவர்களுக்குத் துன்பம் செய்தவர்களை தெய்வம் தண்டிக்கும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் பின்பற்றி தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் கொலைகார ராசப்க்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்கும் தக்க தண்டனை கொடுக்க வேண்டி வேடப்பர் கோயிலில் தமிழ்ப் படைப்பளிகள் பேரியக்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சீட்டு எழுதி கட்டியுள்ளனர். அதன் விவரம் பின் வருமாறு. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் அருள்மிகு வேடப்பரைக் குலதெய்வமாகக் கொண்ட மக்களின் சார்பில் நாங்கள்,தாங்களுக்கு நாளது தேதியில் எழுதிக்கொள்ளும் பிராது. எங்களின் தமிழின உறவுகளாகிய அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நச்சுக்குண்டு வீசி கொன்று குவித்து வரும் ராசபக்சேவையும் சரத் பொன்சேகாவையும் மாறு கால் மாறு கை வாங்கி தண்டனை கொடுக்குமாறு வேண்டி இச்சீட்டினைத் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். இது எங்களின் கடைசி நம்பிக்கை, ஏனென்றால் நாங்கள் யார் யாரையோ நம்பினோம் அவர்கள் எல்லோரும் எங்களை கைவிட்ட நிலையில் தங்களை மட்டுமே ஈழத்தமிழ் மக்களைக்காக்கும் கடைசி ஆதாரமாக நாங்கள் நம்புகிறோம். எஙள் நம்பிக்கை வீண் போகாமல் கொலைகார ராசபக்சேவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் தக்க தண்டனை கொடுத்து அப்பாவி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு படிக்கட்டணமாக ரூ.10 செலுத்திவிடுகிறோம். தண்டனையைத் தாங்கள் உறுதியாக நிறைவேற்றும் நிலையில் உடன் நாங்கள் அதற்கு பரிகாரமாக படிக்கட்டணம் மற்றும் சிறப்பு கொடுத்து பிராதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு,தங்களைக் குலதெய்வமாகக் கொண்ட மக்களின் சார்பில்கடலூர் மாவட்ட தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க நிர்வாகிகள்.
கோ.தெய்வசிகாமணி,
இரத்தின புகழேந்தி,
கோவிந்தன்,
கண்மணிகுணசேகரன்,
சி.சுந்தரபாண்டியன்,
அன்பாதவன்,
ஆறு.இளங்கோவன்,
மா.துரைராசு,
இராம.அசோகன்,
புதூர் சாமி,
சீவாசெந்தில்,
தங்க.வெங்கடேசன்,
அரங்க.வேணுநாதன்,
சிவராமகிருட்டிணன்,
கு.தமிழாகரன்,பூமாலைமணிவண்ணன்,
காமராசு,திருமாறன்,
செம்புலிங்கம்,
செகநாதன்.
..

1 கருத்து:

  1. nanbha Enn uyire , Tamilanaha pirantha naan indru azhuvathai thavira veru ethum seiya mudiyavillai. En Kula ratham odum poodu oruvarum thunai varavilai. Kadavul than nammalai kappatra veendum. Kadavul,irunthal nichayam Rajpache vikkum thandanai unndu,itha kodiya ennapadukolai ku udanthaiyaha irunda thailavarhalukkum nichayam thandanai undu.

    பதிலளிநீக்கு